sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தமிழ் பெயர் கொண்ட ஊர்களுக்கு தவறான அறிவிப்பு பலகைகள்

/

தமிழ் பெயர் கொண்ட ஊர்களுக்கு தவறான அறிவிப்பு பலகைகள்

தமிழ் பெயர் கொண்ட ஊர்களுக்கு தவறான அறிவிப்பு பலகைகள்

தமிழ் பெயர் கொண்ட ஊர்களுக்கு தவறான அறிவிப்பு பலகைகள்


ADDED : செப் 07, 2011 10:28 PM

Google News

ADDED : செப் 07, 2011 10:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியாகதுருகம்:அழகான தமிழ் பெயர் கொண்ட ஊர்களுக்கு தவறான வகையில் பெயர் பலகைகள் வைத்துள்ளதால் அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை- சேலம் இடையே 1,000 கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச்சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. உளுந்துர்பேட்டையில் இருந்து ஆத்தூர் வரையில் பணிகள் முடிந்துள்ளதால் பெயர் பலகைகள் வைத்து வருகின்றனர். நான்குவழிச்சாலைகள் செல்லும் வழியில் உள்ள ஊர்களின் பெயர்கள் பச்சை நிற போர்டில் வெள்ளை நிறத்தில் பெரிதாக எழுதி வைத்துள்ளனர்.இதில் பல ஊர்களில் பெயர்கள் தவறாக அச்சிடப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அடுத்த உலகம்காத்தான் என்ற ஊரின் பெயரை 'உலகம் காட்டான்' என்று எழுதி வைத்துள்ளனர். ஆங்கிலத்தில் உள்ள பெயரை அப்படியே தமிழில் காப்பியடித்து எழுதியதால் ஊர்களின் பெயர்கள் அர்த்தம் மாறி பரிதாபமாக காட்சியளிக்கிறது.அழகான தமிழ் பெயரை அப்படியே எழுதி வைத்து அதனை ஆங்கிலத்தில் எழுதாமல், ஆங்கிலத்தில் உள்ள பெயரை தமிழில் எழுதும்போது உலகம் காத்தான் என்பது 'உலகம் காட்டானாக' மாறியுள்ளது.

இதில் என்ன கொடுமை என்றால் ஆங்கிலத்தில் எழுதியுள்ள பெயரும் தவறாக உள்ளதுதான்.அதேபோல் ஏமப்பேர் என்ற ஊரின் பெயரை ஏமப்பர் என்றும் தவறாக எழுதி பெயர்பலகை வைத்துள்ளனர். ஏதோ கடமைக்கு பெயர் பலகை வைக்காமல், ஊரின் பாரம்பரியத்தையும், வரலாற்றை எடுத்துக்கூறும் அடையாளங்களாக உள்ள தமிழ் பெயர்களை மாற்றி கொச்சைப்படுத்தாமல் சரியான பெயரை பலகையில் எழுதி வைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us