ADDED : செப் 21, 2011 10:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்:மின்சாரம் தாக்கியதில் விவசாயி இறந்தார்.விக்கிரவாண்டி அடுத்த
பாப்பனப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராசு, 65.
விவசாயியான இவர் நேற்று
முன்தினம் காலை தனது வயலுக்கு சென்றார். அங்கு கீழே அறுந்து கிடந்த மின்
ஒயரை கவனக் குறைவாக மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கியதில் சம்பவ
இடத்திலேயே இறந்தார்.இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து
விசாரித்து வருகின்றனர்.