/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்திற்கு துணை முதல்வர் வருகை முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை
/
விழுப்புரத்திற்கு துணை முதல்வர் வருகை முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை
விழுப்புரத்திற்கு துணை முதல்வர் வருகை முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை
விழுப்புரத்திற்கு துணை முதல்வர் வருகை முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை
ADDED : அக் 31, 2024 12:29 AM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்திற்கு, துணை முதல்வர் வருவதையொட்டி, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து, அனைத்துத்துறை சார்ந்த முக்கிய அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் பழனி தலைமை வகித்து பேசும் போது,''தமிழக முதல்வர், மாநில வளர்ச்சிக்கும், பொதுமக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் செயல்படுத்திய பல்வேறு சிறப்புத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் வகையில் வரும் நவ.5 மற்றும் நவ.6 ஆகிய தினங்களில், துணை முதல்வர் உதயநிதி, விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்து, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களின் திட்டப்பணிகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
அதனடிப்படையில், விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத்துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் துறை சார்ந்த அரசு நலத்திட்டங்கள் வழங்குவது குறித்தும் முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து, தற்போது மாவட்டத்தில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளின் நிலை குறித்தும், பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கலெக்டர் கேட்டறிந்தார்.
தொடர்ந்து நிறைவு பெறாத திட்டப்பணிகளை விரைந்து முடித்திடுமாறும், பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணவும், அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கினார்.
இக்கூட்டத்தில் டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, திட்ட இயக்குநர்(மகளிர் திட்டம்)காஞ்சனா உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.