ADDED : மே 07, 2025 01:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : மனிதநேய வர்த்தக சங்கம் சார்பில் நலிவடைந்த வியாபாரிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த நிகழ்ச்சிக்கு, ம.ம.க., மாநில வர்த்தக அணி பொருளாளர் அப்துல் ஹக்கீம் தலைமை தாங்கினார்.
மனிதநேய வணிகர் சங்கம் மாநில செயலாளர் கவுஸ்பாஷா வரவேற்றார். மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., பொது செயலாளர் அப்துல்சமது எம்.எல்.ஏ., த.மு.மு.க., மாநில செயலாளர் முஸ்தாக்தீன் சிறப்புரையாற்றினர்.
எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, மஸ்தான் ஆகியோர், நலிவடைந்த வியாபாரிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். ரவிக்குமார் எம்.பி., மாவட்ட ஊராட்சிக்குழு சேர்மன் ஜெயச்சந்திரன், காங்., மாநில துணை தலைவர் குலாம்மொய்தீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.