/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கணவரை பிரிந்த மனைவி துாக்கு போட்டு தற்கொலை
/
கணவரை பிரிந்த மனைவி துாக்கு போட்டு தற்கொலை
ADDED : ஜூலை 06, 2025 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வளவனுார் அருகே கணவரை பிரிந்த வேதனையில் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
வளவனுார் அடுத்த எல்.ஆர்.பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் மனைவி தமிழரசி, 40; குழந்தை இல்லை. இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தமிழரசி, அவரது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
இதனால், மனமுடைந்த நிலையில் இருந்த அவர், 2 நாட்களுக்கு முன் வீட்டில் துாக்கு போட்டுக் கொண்டார். உடன், ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று முன்தினம் இறந்தார்.
வளவனுார் போலீசார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.