ADDED : செப் 05, 2025 09:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்:
பேராவூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சிசுபாலன். இவரது மனைவி அங்காளம்மாள், 54; கடந்த ஆக., 30ம் தேதி, இந்த தம்பதிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
அதில் கோபித்துக்கொண்டு வெளியே சென்ற அங்காளம்மாள் வீடு திரும்ப வில்லை. அவரை உறவினர்கள் வீடுகள் உட்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து சிசுபாலன் கிளியனுார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.