ADDED : நவ 21, 2025 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: மனைவியைக் காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.
அனந்தபுரம் அடுத்த உடையாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிகண்ணு மனைவி இருசம்மாள், 37; இவர், கடந்த 12ம் தேதி காலை பனமலையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சாமிக்கண்ணு அளித்த புகாரின் பேரில், அனந்தபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

