ADDED : நவ 30, 2024 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : மனைவியை காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.
காணை அடுத்த காரணை பெரிச்சானுார் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மனைவி கனகவள்ளி, 35; இவர், கடந்த 5ம் தேதி தனது கணவருடன் ஏற்பட்ட தகராறில் காணையில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். பின், 7 ம் தேதி இங்கிருந்து வெளியே சென்ற கனகவள்ளி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
இதுகுறித்து முருகன் அளித்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.