ADDED : செப் 17, 2025 12:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; காணை சப் இன்ஸ்பெக்டர் சிவானந்தகுமார் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் காலை தோகைபாடி அருகே ரோந்து சென்றனர்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த நித்யா, 44; என்பவர் பெட்டிகடையில் சோதனையிட்டபோது, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. காணை போலீசார் வழக்கு பதிந்து, அவரை கைது செய்து, குட்காவை பறிமுதல் செய்தனர்.