sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை; கணவர், மாமியாருக்கு 7 ஆண்டு சிறை

/

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை; கணவர், மாமியாருக்கு 7 ஆண்டு சிறை

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை; கணவர், மாமியாருக்கு 7 ஆண்டு சிறை

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை; கணவர், மாமியாருக்கு 7 ஆண்டு சிறை


ADDED : டிச 31, 2024 04:36 AM

Google News

ADDED : டிச 31, 2024 04:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : வரதட்சணை கேட்டு பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவர், மாமியாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப் பட்டது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுகா மேலநத்தத்தைச் சேர்ந்த சண்முகம் மகள் லிதியால், 27; என்பவரும், விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அடுத்த விநாயகபுரத்தை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், 34; என்பவரும், காதலித்து, 2016ல் திருமணம் செய்துகொண்டு, விநாயகபுரத்தில் வசித்து வந்தனர்.

திருமணமான சில மாதங்களிலேயே வரதட்சணை கேட்டு, மாமியார் இந்திராணி,68; கணவர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர்.

இதனால், நகை, பைக் மற்றும் பொருள்களை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

மேலும், வரதட்சணையாக ரூ.50 ஆயிரம் கேட்டு கொடுமைப்படுத்தியதால், லிதியால், கடந்த 16.12.2018ல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து, அவலூர்பேட்டை போலீசார் ஜெயப்பிரகாஷ், இந்திராணி மீது வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியஜோதி, குற்றம் சாட்டப்பட்ட ஜெயப்பிரகாஷ், இந்திராணி ஆகிய இருவருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இருவரும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us