sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

முன்னால் சென்ற டிராக்டரில் பைக் மோதி பெண் பலி

/

முன்னால் சென்ற டிராக்டரில் பைக் மோதி பெண் பலி

முன்னால் சென்ற டிராக்டரில் பைக் மோதி பெண் பலி

முன்னால் சென்ற டிராக்டரில் பைக் மோதி பெண் பலி


ADDED : டிச 05, 2024 07:06 AM

Google News

ADDED : டிச 05, 2024 07:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானூர்: ஆரோவில் அருகே முன்னால் சென்ற டிராக்டரின் பின்பக்கமாக பைக் மோதிய விபத்தில், இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

கிளியனூர் இந்திரா நகரை சேர்ந்தவர் மோகன் மகள் அஸ்வினி, 24; இவர் புதுச்சேரியில் ஹோம்கேர் வேலை செய்து வருகிறார். நேற்று காலை 9;00 மணிக்கு, அதே ஊரை சேர்ந்த வேலு மகன் அஜய், 24; என்பவருடன், புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் பைபாஸ் சாலை வழியாக பைக்கில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

புதுச்சேரி-திண்டிவனம் பைபாஸ் சாலையில், மொரட்டாண்டி டோல்கேட் அடுத்த தாபா ஓட்டல் அருகே சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் திடீரென வலது புறமாக திரும்பியுள்ளது. அதில், மோட்டார் பைக் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த இருவரும் பலத்த காயமடைந்து ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அஸ்வினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து அஸ்வினி தாய் ரேவதி கொடுத்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us