/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண்ணுக்கு கத்திகுத்து: வாலிபருக்கு வலை
/
பெண்ணுக்கு கத்திகுத்து: வாலிபருக்கு வலை
ADDED : ஜன 08, 2025 05:23 AM
விழுப்புரம் : விழுப்புரம் மருதூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்திபன் மனைவி தனலட்சுமி, 25; இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவன், மனைவிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால், தனலட்சுமி பிரிந்து சென்று, கடந்த 8 மாத காலமாக, விழுப்புரம் முத்தோப்பு பகுதியைச் சேர்ந்த அரவிந்த்,29; என்பவருடன், தனது குழந்தையுடன் சென்று குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இடையே, இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதால், கடந்த 2 மாதமாக, தனலட்சுமி பிரிந்து வந்து தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் தனலட்சுமியின் வீட்டிற்கு சென்ற அரவிந்த், தான் வாங்கி கொடுத்த மிக்சி, டேபிள்பேன் உள்ளிட்ட பொருள்களை திருப்பிகேட்டு தகராறு செய்துள்ளார்.
அப்போது ஆத்திரமடைந்த அரவிந்த், கத்தியால் தனலட்சுமியை குத்திவிட்டு தப்பியுள்ளார். காயமடைந்த தனலட்சுமியை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
புகாரின் பேரில் அரவிந்த் மீது விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.