/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குழந்தையுடன் பெண் மாயம் கணவர் போலீசில் புகார்
/
குழந்தையுடன் பெண் மாயம் கணவர் போலீசில் புகார்
ADDED : ஜூன் 22, 2025 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வளவனுார் அருகே குழந்தையுடன் காணாமல்போன பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், வளவனுார் குமாரக்குப்பம் காலனி பகுதியை சேர்ந்தவர் பாலா, 32; கூலி தொழிலாளி. இவரது மனைவி வனிதா, 31; இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக, கடந்த 17ம் தேதி வீட்டை விட்டு மகனுடன் வெளியே சென்ற வனிதா வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து, குழந்தையுடன் மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.