sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெண்ணை தற்கொலைக்கு துாண்டிய வழக்கு; உறவினருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

/

பெண்ணை தற்கொலைக்கு துாண்டிய வழக்கு; உறவினருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

பெண்ணை தற்கொலைக்கு துாண்டிய வழக்கு; உறவினருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

பெண்ணை தற்கொலைக்கு துாண்டிய வழக்கு; உறவினருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை


ADDED : டிச 10, 2024 06:23 AM

Google News

ADDED : டிச 10, 2024 06:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் ; விழுப்புரம் மாவட்டம், அவலுார்பேட்டை அடுத்த தாழனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி சிவரஞ்சனி, 26; இவர்களுக்கு 4 வயதில் மகள் உள்ளார். மணிகண்டன், கடந்த 2013ம் ஆண்டு உடல் நலக்குறைவால் இறந்தார்.

2016ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி சிவரஞ்சனி தனது கணவரின் சகோதரி உமா வீட்டில் இருந்த மகளை அழைத்து வர அவரது வீட்டிற்கு சென்றார்.

அப்போது, உமாவின் கணவர் செல்வம், 46; சிவரஞ்சனியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்த சிவரஞ்சனி, தனது வீட்டிற்கு சென்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், தற்கொலைக்கு துண்டியதாக செல்வம், உமா மீது அவலுார்பேட்டை போலீசார், வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சங்கீதா ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி இளவரசன் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

அதில், செல்வத்திற்கு, 10 ஆண்டு சிறையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். அபராத தொகை கட்டத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், உமாவை வழக்கில் இருந்து விடுதலை செய்தும் தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us