sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வந்தே பாரத் ரயில் மீது கல் வீச்சு; விழுப்புரம் அருகே தொழிலாளி கைது

/

வந்தே பாரத் ரயில் மீது கல் வீச்சு; விழுப்புரம் அருகே தொழிலாளி கைது

வந்தே பாரத் ரயில் மீது கல் வீச்சு; விழுப்புரம் அருகே தொழிலாளி கைது

வந்தே பாரத் ரயில் மீது கல் வீச்சு; விழுப்புரம் அருகே தொழிலாளி கைது


ADDED : நவ 05, 2025 01:36 AM

Google News

ADDED : நவ 05, 2025 01:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே வந்தே பாரத் ரயில் மீது கல் வீசிய தொழிலாளியை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

சென்னையிலிருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற வந்தே பாரத் ரயில் மற்றும் திருச்செந்துார் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீது, இரு தினங்களுக்கு முன் மயிலம் - விழுப்புரம் இடையே மர்ம நபர்கள் கல் வீசியுள்ளனர். இதில், ரயில் ஜன்னல் கண்ணாடி சேதமடைந்ததாக புகார் அளிக்கப்பட்டது.

ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

அதில், மயிலம் அடுத்த சித்தணியைச் சேர்ந்த அருள், 50; என்ற தொழிலாளி, ரயில்கள் மீது கல் வீசியது தெரியவந்தது. இதனையடுத்து, விழுப்புரம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அருளை பிடித்து விசாரித்தனர்.

அவர், ஆடு மேய்த்தபோது, தண்டவாளம் அருகிலிருந்த ஆடுகளை விரட்டவே கல் எறிந்ததாக தெரிவித்துள்ளார். அருளை கைது செய்த போலீசார், விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கடலுார் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us