ADDED : பிப் 15, 2024 06:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி, : தொழிலாளி நெஞ்சு வலியால் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முண்டியம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் அருண்குமார், 25. இவர் தனது உறவினர் ரகுராமன் என்பவர்விக்கிரவாண்டி, குத்தாம்பூண்டி ரோட்டில் நடத்தி வரும் மசாலா விற்பனை கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
நேற்று மாலை 5:00 மணியளவில் அருண்குமாருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
உடன் அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, விக்கிரவாண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை டாக்டர் பரிசோதித்து ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார்.
இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

