ADDED : டிச 20, 2024 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வளவனுார் அருகே வலிப்பு நோயாளி நீரில் மூழ்கி இறந்தார்.
வளவனுார் அடுத்த சொர்ணாவூர் கீழ்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ரமேஷ், 33; கூலித் தொழிலாளி. இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் வருவது வழக்கம்.
இந்நிலையில் ரமேஷ், கடந்த 17ம் தேதி அதே கிராமத்தில் உள்ள பாகூரான் வாய்க்காலில் கால் கழுவ சென்ற போது, திடீரென வலிப்பு ஏற்பட்டு வாய்க்கால் நீரில் மூழ்கி இறந்தார்.
வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.