நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம் : குடும்பத் தகராறில் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மயிலம் அடுத்த சின்ன வளவனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ், 42; தொழிலாளி. இவரது மனைவி சுகுணா. இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த மகேஷ் நேற்று முன்தினம், வீட்டில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
உடன், மயிலம் கேணிப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.
மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.