
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : நன்னாடு கிராமத்தில், பெரியாண்டவர் குலதெய்வ வழிபாடு நடைபெற்றது.
விழுப்புரம் அடுத்த நன்னாடு கிராம பொதுமக்கள், ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு நடத்துவது வழக்கம்.
இதையொட்டி, அந்த பகுதியில் உள்ள காளிகோவில் அருகில் பெரியாண்டருக்கு பொங்கல் வைத்து படையலிடப்பட்டது. இதில் கிராம மக்கள் ஏராளமானோர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை செய்தனர்.