/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் தற்கொலை : போலீஸ் விசாரணை
/
திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் தற்கொலை : போலீஸ் விசாரணை
திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் தற்கொலை : போலீஸ் விசாரணை
திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் தற்கொலை : போலீஸ் விசாரணை
ADDED : ஏப் 13, 2025 05:07 AM

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே இளம்பெண் துாக்குப்போட்டு இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த கோவுலாபுரம், மந்தக்கரை தெருவைச் சேர்ந்தவர் வினாயகமூர்த்தி, 29; சென்னை தனியார் கார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா, 25; திருவெண்ணெய்நல்லுாரில் உள்ள டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டில் வேலை செய்து வந்தார். இருவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
கவிதா, நேற்று முன்தினம் இரவு சாப்பிடாமல் மனமுடைந்த நிலையில் 11:30 மணியளவில் அறைக்கு சென்றவர் கதவை தாழ்ப்பாள் போட்டுக் கொண்டார்.
சிறிது நேரத்தில் விநாயகமூர்த்தி மற்றும் அவரது பெற்றோர் அறை கதவை தட்டியும் திறக்காததால் ஜன்னலைத் திறந்து பார்த்தபோது கவிதா, புடவையால் துாக்கு போட்டுக் கொண்டது தெரியவந்தது.
கதவை உடைத்து அவரை மீட்டு 12:30 மணியளவில் திருவெண்ணெய்நல்லுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே கவிதா இறந்து விட்டதாக தெரிவித்தார்.
தகவலறிந்த கவிதாவின் தம்பி புகழேந்தி மற்றும் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை முன் குவிந்து, கவிதாவின் தலை, நெற்றி பகுதியில் வெட்டுக்காயம் இருப்பதால் அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி வினாயகமூர்த்தி மற்றும் அவரது உறவினர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.
தகவலறிந்து வந்த விழுப்புரம் ஏ.எஸ்.பி., ரவீந்திரகுமார குப்தா, இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
அதனைத் தொடர்ந்து அதிகாலை 2:00 மணியளவில் கவிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 7 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.