/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கலெக்டர் கார் முன் இளம்பெண் தர்ணா
/
கலெக்டர் கார் முன் இளம்பெண் தர்ணா
ADDED : ஆக 07, 2025 02:47 AM

விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் அடுத்த அரியலுார் திருக்கையை சேர்ந்தவர் கோவிந்தன் மகள் ஐஸ்வர்யா, 25; இவர் நேற்று மதியம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்றிருந்த கார் முன், தரையில் விழுந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, ஐஸ்வர்யா கூறியதாவது:
எனக்கும், செஞ்சி அடுத்த காரை கிராமத்தை சேர்ந்த புருஷோத்தமன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் எனது கணவரும், மாமனார், மாமியாரும் சேர்ந்து வரதட்சணையாக நகை, பணம் கேட்டு கொடுமை செய்து வருகின்றனர். செஞ்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இது குறித்து சமூகநலத்துறை அதிகாரிகள் எங்கள் இருவரையும் இன்று (நேற்று) விசாரணைக்கு அழைத்தனர். ஆனால், என் கணவர் விசாரணைக்கு வரவில்லை. இதனால், எனக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, கோரிக்கை மனுவை மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம், கொடுத்துவிட்டு ஐஸ்வர்யா, அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.