sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஏ.டி.எம்., கார்டை திருடி ரூ. 6.10 லட்சம் 'அபேஸ்' சுற்றுலா பயணியுடன் நட்பாகி வாலிபர் கைவரிசை

/

ஏ.டி.எம்., கார்டை திருடி ரூ. 6.10 லட்சம் 'அபேஸ்' சுற்றுலா பயணியுடன் நட்பாகி வாலிபர் கைவரிசை

ஏ.டி.எம்., கார்டை திருடி ரூ. 6.10 லட்சம் 'அபேஸ்' சுற்றுலா பயணியுடன் நட்பாகி வாலிபர் கைவரிசை

ஏ.டி.எம்., கார்டை திருடி ரூ. 6.10 லட்சம் 'அபேஸ்' சுற்றுலா பயணியுடன் நட்பாகி வாலிபர் கைவரிசை


ADDED : ஜூலை 24, 2025 04:04 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 04:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: ஆரோவில்லில் சுற்றுலா பயணியுடன் நட்பாகி, அவருடைய ஏ.டி.எம்., கார்டை திருடி, ரூ.6.10 லட்சம் அபேஸ் செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

குஜராத் மாநிலம், அகமதாபாத் நவநரோடா பகுதியை சேர்ந்தவர் சத்தியபிரகாஷ் மகன் அனுராக்சிங், 25; இவர் கடந்த மாதம் 13ம் தேதி ஆரோவில்லை சுற்றி பார்க்க வந்தார். அங்குள்ள ஒரு விடுதியில் தங்கினார்.

அப்போது, அங்கு வந்த கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த அஜய் குரோபதி, 25; என்பவர் நட்பாக பழகினார். இருவரும் சேர்ந்து ஒரே அறையில் தங்கினர்.

அன்றைய தினம், இரவு 10:00 மணிக்கு, அனுராக்சிங் பார்த்தபோது, அஜய் குரோபதியை காணவில்லை. மேலும் அவர் வைத்திருந்த லேப்டாப், ரூ. 5 ஆயிரம், வங்கி ஏ.டி.எம்., கார்டு ஆகியவற்றை அவர் திருடி சென்றது தெரிந்தது. தொடர்ந்து, அவர் தன்னுடைய வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது, அஜய் குரோபதி, அந்த ஏ.டி.எம்., கார்டு மூலம் ரூ. 6 லட்சத்து 10 ஆயிரத்தை எடுத்திருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அனுராக் சிங், ஆரோவில் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அஜய் குரோபதியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us