ADDED : அக் 09, 2025 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: பொது இடத்தில் ஆபாசமாக திட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், செஞ்சி பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, ஊரல் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் வினோத், 24; என்பவர் பொது இடத்தில் ஆபாசமாக திட்டிக்கொண்டிருந்தது தெரியவந்தது.
திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிந்து வினோத்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.