sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மாணவரிடம் வழிப்பறி வாலிபர்  கைது

/

மாணவரிடம் வழிப்பறி வாலிபர்  கைது

மாணவரிடம் வழிப்பறி வாலிபர்  கைது

மாணவரிடம் வழிப்பறி வாலிபர்  கைது


ADDED : செப் 13, 2025 07:22 AM

Google News

ADDED : செப் 13, 2025 07:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே கல்லுாரி மாணவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி மொபைல் போன், பணம் பறித்த நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

விக்கிரவாண்டி அடுத்த கீழக்கொந்தையைச் சேர்ந்த சந்திரபோஸ் மகன் அன்பரசன், 18: விக்கிரவாண்டியில் தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர், நேற்று பிற்பகல் 2:30 மணியளவில் வி.சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே தனியாக மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் திடீரென அன்பரசன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மொபைல் போன் மற்றும் 1,000 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பியோடினார்.

அன்பரசன் கூச்சலிட்டதைத் தொடர்ந்து, அக்கம் பக்கத்திலிருந்த பொதுமக்கள் திரண்டு வாலிபரை துரத்திச் சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், அந்த நபர் திண்டிவனம் கிடங்கல் பகுதியை சேர்ந்த அஜய், 28; எனவும், இவர் மீது திண்டிவனம் போலீசில் 12 திருட்டு வழக்குகளும், மயிலம் போலீசில் ஒரு திருட்டு வழக்கு என 13 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து அஜய் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us