/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரேஷன் அரிசி கடத்தல் :வாலிபர் கைது
/
ரேஷன் அரிசி கடத்தல் :வாலிபர் கைது
ADDED : மார் 11, 2026 04:14 AM
விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே ஆந்திரா மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விக்கிரவாண்டி அடுத்த பனமலைபேட்டை காலனி பஸ் நிறுத்தம் அருகே விழுப்புரம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு, மூட்டைகளுடன் சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து மூட்டைகளை சோதனை செய்ததில் 22 மூட்டைகளில் தலா 50 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி மூட்டைகளை ஆந்திரா மாநிலத்திற்கு கடத்திச் செல்ல இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், அவர் ஆந்திரா மாநிலம், சித்துாரைச் சேர்ந்த பலராம் மகன் சதீஷ், 33; என தெரிந்தது.
உடன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

