ADDED : செப் 29, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: மலட்டாற்றில் மாட்டு வண்டியில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் பகுதியில் மணல் கடத்தல் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், இன்ஸ்பெக்டர் அழகிரி மற்றும் போலீசார் காந்திகுப்பம் மலட்டாறு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்திய அதே பகுதியை சேர்ந்த கருணாநிதி மகன் விஷ்ணு, 25; என்பவரை கைது செய்தனர்.
மேலும் அவர் மணல் கடத்தி வைத்திருந்த மாட்டு வண்டியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.