/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தொழிலாளிக்கு மிரட்டல் வாலிபர் கைது
/
தொழிலாளிக்கு மிரட்டல் வாலிபர் கைது
ADDED : செப் 29, 2024 06:42 AM
மயிலம்: மயிலம் அருகே கூலித் தொழிலாளியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விக்கிரவாண்டி அடுத்த அயனம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன், 48; ஓவியர். இவர் மரக்காணம் தாலுகாவில் உள்ள பெருமுக்கல் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் ராஜாமணி, 29; என்பவரிடம் கூலி வேலை செய்து வந்தார்.
இளங்கோவன் நேற்று வேலைக்குச் செல்லாததால், ஏன் வேலைக்கு வரவில்லை என ராஜாமணி போன் மூலம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே போனில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த ராஜாமணி, நேரில் சென்று, ஜக்காம்பேட்டையில் இருந்த இளங்கோவனிடம் தகராறு செய்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து இளங்கோவன் அளித்த புகாரின் பேரில், மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து ராஜாமணியை கைது செய்தனர்.