/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காதலை துண்டித்த பெண் குடும்பத்தினர் மீது தாக்குதல் செஞ்சியில் வாலிபர் கைது
/
காதலை துண்டித்த பெண் குடும்பத்தினர் மீது தாக்குதல் செஞ்சியில் வாலிபர் கைது
காதலை துண்டித்த பெண் குடும்பத்தினர் மீது தாக்குதல் செஞ்சியில் வாலிபர் கைது
காதலை துண்டித்த பெண் குடும்பத்தினர் மீது தாக்குதல் செஞ்சியில் வாலிபர் கைது
ADDED : ஜூன் 03, 2025 12:14 AM
செஞ்சி: காதலை துண்டித்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
செஞ்சி அடுத்த வேளாமை கிராம் யாசகம் மனைவி கல்யாணி, 45; இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். பட்டதாரியான இவரது மகள் அதே கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் ரமேஷ், 27; என்பவரை காதலித்து வந்தார்.
ரமேஷின் நடத்தை சரியில்லாததால், அவருடன் பேசுவதை கல்யாணி மகள் நிறுத்தி விட்டார். வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு நடந்தது.
இதனால் ஆத்திரமான ரமேஷ் தனது தந்தை ஏழுமலை, தாய் சிவகாமியுடன் நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, கல்யாணியின் வீட்டிற்கு சென்று கல்யாணி, அவரது மகள், மகன், மருமகள் ஆகியோரை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து கல்யாணி கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி அனைத்து மகளிர் போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிந்து ரமேஷை கைது செய்தனர்.