sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பேனர் வைத்த தகராறில் வாலிபர் அடித்து கொலை

/

பேனர் வைத்த தகராறில் வாலிபர் அடித்து கொலை

பேனர் வைத்த தகராறில் வாலிபர் அடித்து கொலை

பேனர் வைத்த தகராறில் வாலிபர் அடித்து கொலை


ADDED : ஜூன் 14, 2025 06:19 AM

Google News

ADDED : ஜூன் 14, 2025 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வளவனுார்: விழுப்புரம் மாவட்டம், வளவனுார் அடுத்த ராம்பாக்கம் காலனியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 26; கூலி தொழிலாளி. இவர், நேற்று அதிகாலை, பக்கத்து கிராமமான சொரப்பூரில் தலையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.

வளவனுார் போலீசார், ரஞ்சித்குமார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். தொடர்ந்து, அதே பகுதியை சேர்ந்த நண்பர் ஒருவரின் பிறந்த நாளுக்காக, ரஞ்சித்குமார், அவரது நண்பர்கள் ஜூன் 11ல் சொரப்பூரில் பேனர் வைத்தனர்.

அதில், சிலரது பெயர் சேர்த்த பிரச்னையில் பேனர் கிழிக்கப்பட்டதால், நண்பர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சொரப்பூரில் ரஞ்சித்குமாரின் நண்பர்கள் மது அருந்திய போது, அங்கு சென்ற ரஞ்சித்குமாருக்கும், மற்றவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.

அப்போது சிலர் பீர் பாட்டிலால் தலையில் அடித்ததில் ரஞ்சித்குமார் இறந்தது தெரிய வந்தது. வளவனுார் போலீசார், சிலரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us