sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குடிக்க பணம் தராததால் வாலிபர் தற்கொலை

/

குடிக்க பணம் தராததால் வாலிபர் தற்கொலை

குடிக்க பணம் தராததால் வாலிபர் தற்கொலை

குடிக்க பணம் தராததால் வாலிபர் தற்கொலை


ADDED : செப் 04, 2025 01:56 AM

Google News

ADDED : செப் 04, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே மனைவி குடிக்க பணம் தராததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

வானுார் அருகே கொரளூர் கிராமத்தை சேர்ந்தவர் நவேந்திரன், 29; கூலித் தொழிலாளி. இவரது மனைவி பாவனா,25; இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

இருவரும், விக்கிரவாண்டி அடுத்த தொரவியிலுள்ள பார்த்திபன் என்பவரது நிலத்தில் செங்கல் தயாரிக்கும் வேலை செய்து வந்தனர். கடந்த இரு தினங்களுக்கு முன், நாவேந்திரன் மனைவி பாவனாவிடம் குடிக்க பணம் கேட்டார். அதற்கு அவர் பணம் தர மறுத்தார்.

இதையடுத்து நாவேந்திரன் பூச்சி மருந்து குடித்து மயங்கினார். அவரை உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us