ADDED : அக் 09, 2024 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்காணம்: மரக்காணம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்தார்.
மரக்காணம் அடுத்த ராவணாபுரத்தைச் சேர்ந்த முனியன், 42; இவர், நேற்று காலை 9:30 மணிக்கு அதே ஊரைச் சேர்ந்த புருஷேத்தமன் நிலத்தில் தண்ணீர் இறைப்பதற்காக மோட்டார் சுவிட்சை ஆன் செய்தார். அப்போது மின்சாரம் தாக்கி முனியன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பிரம்மதேசம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.