ADDED : டிச 24, 2024 06:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: தண்டவளாத்தை கடக்க முயன்ற வாலிபர் ரயிலில் சிக்கி இறந்தார்.
திண்டிவனம் சிந்து நகரைச் சேர்ந்தவர் இக்பால் மகன் அகமது இஸ்மாயில்,23; இவர் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இவர், நேற்று முன்தினம் இரவு திண்டிவனம் எம்.ஆர்.எஸ். ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது, சென்னையில் இருந்து வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது.
அதில் படுகாயமடைந்த அகமதுஇஸ்மாயில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இவர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது காதில், ெஹட்போன் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து செங்கல்பட்டு ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.