ADDED : ஆக 09, 2025 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: கஞ்சா விற்ற இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார், கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் மதியம் ரோந்து சென்றனர்.
அப்போது, முத்தமிழ்நகரை சேர்ந்த சசிகுமார் மகன்கள் சூர்யபிரகாஷ், 25; விஷ்வா, 23; ரசாக் லேவுட் பகுதியை சேர்ந்த அசோக்குமார் மகன் கிருஷ்ணகுமார், 19; ஆகியோர், அந்த பகுதியில் கஞ்சா பொட்டலம் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது.
விழுப்புரம் டவுன் போலீசார், அவர்களிடமிருந்து 150 கிராம் கஞ்சா மற்றும் 300 ரூபாயை பறிமுதல் செய்து, சூர்யபிரகாஷ், விஷ்வா ஆகியோரை கைது செய்தனர். கிருஷ்ணகுமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.