sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 அதிவேகமாக வாகனம் ஓட்டிய வாலிபர்கள் கைது

/

 அதிவேகமாக வாகனம் ஓட்டிய வாலிபர்கள் கைது

 அதிவேகமாக வாகனம் ஓட்டிய வாலிபர்கள் கைது

 அதிவேகமாக வாகனம் ஓட்டிய வாலிபர்கள் கைது


ADDED : நவ 12, 2025 10:37 PM

Google News

ADDED : நவ 12, 2025 10:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் அதிவேகமாக வாகனம் ஓட்டிய ஐந்து வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே நேற்று தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார், வாகன தணிக்கை செய்தனர்.

அவ்வழியே பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக டிராக்டரை ஓட்டி வந்த, கண்டாச்சிபுரம் அருகே பில்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்த நாகமுத்து மகன் நாகராஜ்,20; என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்ததோடு, வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

அதே போல், நேற்று முன்தினம் கோட்டக்குப்பம் ரவுண்டானா அருகே சப்-இன்ஸ்பெக்டர் ராணி மற்றும் போலீசார் வாகன தணிக்கை செய்த போது, அதிவேகமாக பைக் ஓட்டி வந்த புதுச்சேரி, முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த வேலன் மகன் கீர்த்திவாசன்,21; மதன்ஜோசப் பட்டேல் மகன் ஆதித்யபட்டேல்,21; வைத்திக்குப்பத்தை சேர்ந்த பெருமாள் மகன் மகேஷ்,20; சோலை நகரை சேர்ந்த கண்ணன் மகன் விஷ்ணு,22; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, வாகனங்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us