ADDED : மே 02, 2024 04:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி அருகே நரிக்குளம் காளியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடனை செலுத்தினர்.
சிவலிங்காபுரம் அடுத்த நரிக்குளம் கிராமத்தில் காளியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.23ல் கொடி ஏற்றத்துடன் விழா துவங்கியது.
தினமும் காளியம்மன் விசேஷ அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழா நாட்களில் முளைப்பாரி, கயறு குத்து நடந்தது.
கடைசி நாளான நேற்று அம்மன் வீதி உலா முடிவில் இன்று காலை அம்மன் மற்றும் முளைப்பாரிகள் கரைக்கப்படும். ஏராளமானோர் பங்கேற்றனர்.

