sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

----வைக்கோலும் கை கொடுக்கல நெல் விலையும் குறைஞ்சிடுச்சு--

/

----வைக்கோலும் கை கொடுக்கல நெல் விலையும் குறைஞ்சிடுச்சு--

----வைக்கோலும் கை கொடுக்கல நெல் விலையும் குறைஞ்சிடுச்சு--

----வைக்கோலும் கை கொடுக்கல நெல் விலையும் குறைஞ்சிடுச்சு--


ADDED : மார் 03, 2024 05:45 AM

Google News

ADDED : மார் 03, 2024 05:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்: ராஜபாளையம் சுற்றுவட்டார நெல் விவசாய பகுதியில் கடைசி கட்ட அறுவடை எட்டிய நிலையில், நெல் விலையுடன், வைக்கோலும் கை கொடுக்காததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியாக உள்ளதால் ராஜபாளையம், சேத்துார், முகவூர், தேவதானம் பகுதியில் நெல் விவசாயம் அதிகம்.

இந்த ஆண்டு பரவலாக அயன் கொல்லங் கொண்டான், கோட்டை, நக்கனேரி, சிதம்பராபுரம், தெற்கு வெங்காநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில் கடைசி கட்ட அறுவடை எட்டி உள்ள நிலையில் வைக்கோலின் விலையை ஏக்கர் ரூ.1,400 க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே நெல் விளையும் குறைந்து வைக்கோலும் கை கொடுக்காததால் விவசாயிகள் வேதனையில் உள்ளாகின்றனர்.

இதுகுறித்து விவசாயி வெங்கடேஷ்: பருவமழை தாமதத்தால் சாகுபடி பணிகளை தாமதித்து துவக்கினோம். கடந்த ஆண்டு வைக்கோல் ஏக்கர் ரூ.2200க்கு கொள்முதல் செய்த வியாபாரிகள் தற்போது விளைச்சல் குறைவை முன்னிட்டு வைக்கோலை கட்டுகளாக விலை நிர்ணயிப்பதால் ஏக்கருக்கு ரூ. 1400 வரையே கிடைக்கிறது. இத்துடன் தொடக்கத்தில் ரூ.2200 வரை நெல் கொள்முதல் செய்தவர்கள் தற்போது ரூ. 1700 வரை கேட்கின்றனர். இதனால் இரண்டு பக்கமும் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. நிலையில்லாத இந்த விலை மாறுபாட்டை அரசு கண்காணித்து விவசாயிகளுக்கான பாதிப்பை சரி செய்ய வேண்டும், என்றார்.






      Dinamalar
      Follow us