/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு கோடவுனுக்கு சீல்; உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை
/
பட்டாசு கோடவுனுக்கு சீல்; உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை
பட்டாசு கோடவுனுக்கு சீல்; உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை
பட்டாசு கோடவுனுக்கு சீல்; உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை
ADDED : மே 31, 2024 06:50 AM
சிவகாசி : சிவகாசி அருகே காரிசேரியில் மாரிக்கனிக்கு சொந்தமான பேன்சி ரக பட்டாசுக்கு உற்பத்தி செய்ய தேவையான அட்டை குழாய் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது.
இந்த நிறுவனத்தில் தீப்பெட்டி தொழில் ஆய்வு தனி தாசில்தார் திருப்பதி தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, தகர செட் கோடவுனில் பேப்பர் பாம், சக்கரம், ஸ்மோக் உள்ளிட்ட பட்டாசுகளை சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கோடவுனிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
அதேபோல் சிவகாசி அருகே வடபட்டியில் ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான சானியோ பட்டாசு ஆலையில் ஆய்வு செய்த போது, அதிகப்படியான தொழிலாளர்களைக் கொண்டும், வேறு நிறுவனங்களின் லேபிளை பயன்படுத்தியும் பட்டாசு உற்பத்தி செய்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரிகள் பரிந்துரை செய்தனர்.