ADDED : ஏப் 18, 2024 05:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் அருகே ஒ.மேட்டுப்பட்டியில் கிணற்றில் குளித்தபோது 12ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பலியானார்.
ஒ.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் பாக்கியம் ராஜ் மகன் ஹரீஷ், 16. 12 ம் வகுப்பு மாணவன். நேற்று மாலை 5:00 மணிக்கு அப்பகுதியில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக நண்பர்களுடன் சென்றார்.
நீச்சல் அடித்து கொண்டிருந்தபோது திடீரென நீரில் மூழ்கி பலியானார். சாத்துார் தீயணைப்பு நிலைய வீரர்கள் ஹரிஷ் உடலை மீட்டனர்.சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

