/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
லட்டு தின்ன ஆசைப்பட்டதால் திருடுபோனது 14 பவுன் நகைகள்
/
லட்டு தின்ன ஆசைப்பட்டதால் திருடுபோனது 14 பவுன் நகைகள்
லட்டு தின்ன ஆசைப்பட்டதால் திருடுபோனது 14 பவுன் நகைகள்
லட்டு தின்ன ஆசைப்பட்டதால் திருடுபோனது 14 பவுன் நகைகள்
ADDED : ஆக 09, 2024 12:12 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் தேரோட்டத்தின் போது, மதியம் 12:00 மணிக்கு தேர் வடக்கு ரத வீதியை கடந்து சென்ற நிலையில், அப்பகுதியில் தனி நபர்கள் சிலர் பக்தர்களுக்கு லட்டு வழங்கினர். அப்போது தேரோட்டத்திற்கு வந்த பெண்களில் பலர் முண்டியடித்து லட்டு வாங்கி உள்ளனர்.
லட்டு வாங்கிவிட்டு வெளியே வந்த ராஜபாளையத்தை சேர்ந்த 2 பெண்களிடம் இருந்து தலா 4, மற்றும் 3 பவுன் நகைகளும், சிவாகாசியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் இருந்து 3 பவுன் நகையும் திருடப்பட்டு உள்ளது. இதுபோல் மேலும் சிலரிடம் நகை திருட்டு சம்பவங்கள் நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த 3 பெண்கள் மட்டுமே போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.