sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளில் நாளை முதல் 150 கன அடி தண்ணீர் திறப்பு

/

பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளில் நாளை முதல் 150 கன அடி தண்ணீர் திறப்பு

பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளில் நாளை முதல் 150 கன அடி தண்ணீர் திறப்பு

பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளில் நாளை முதல் 150 கன அடி தண்ணீர் திறப்பு


ADDED : மே 15, 2024 06:56 AM

Google News

ADDED : மே 15, 2024 06:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு தாலுகா பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளில் இருந்து நாளை முதல், பாசனத்திற்காக 150 கன அடி தண்ணீர் திறக்கப்படவுள்ளது.

கடந்த சில நாட்களாக வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று காலை நிலவரப்படி 47.5 அடி உயரம் உள்ள பெரியாறு அணையில் 27. 40 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது.

அணைக்கு வினாடிக்கு 84. 80 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

இதேபோல் 42.64 அடி உயரம் கொண்ட கோவிலாறு அணையில் 35. 30 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4.02 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் மழையினால் 2 அணைகளுக்கும் தண்ணீர் வரத்து ஏற்பட்டு வருவதால், நாளை மே 16 முதல், 6 நாட்களுக்கு 150 கன அடி தண்ணீர் திறந்துவிட உள்ளதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.

இதற்கிடையில் ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத் தோப்பு மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக பேயனாற்றில் நீர்வரத்து ஏற்பட்டு மம்சாபுரம் பகுதி கன்மாய்களுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டது.

நேற்று மாலை 5:45 மணி முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பலத்த சாரல் மழை பெய்தது. இதனால் விவசாயிகளும், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us