/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 20 ஆண்டு
/
பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 20 ஆண்டு
ADDED : மே 01, 2024 01:50 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் அருகே பேச்சு வராத 18 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளி தங்கேஸ்வரனுக்கு 47, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
விருதுநகர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் தங்கேஸ்வரன். இவர் 2016ல் பேச்சு வராத 18 வயது பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து தங்கேஸ்வரன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் 4 பிரிவுகளுக்கும் சேர்த்து மொத்தம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், அதனை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டும் நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜான்சி ஆஜரானார்.