sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 20 ஆண்டு

/

பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 20 ஆண்டு

பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 20 ஆண்டு

பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 20 ஆண்டு


ADDED : மே 01, 2024 01:50 AM

Google News

ADDED : மே 01, 2024 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் அருகே பேச்சு வராத 18 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளி தங்கேஸ்வரனுக்கு 47, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

விருதுநகர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் தங்கேஸ்வரன். இவர் 2016ல் பேச்சு வராத 18 வயது பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து தங்கேஸ்வரன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் 4 பிரிவுகளுக்கும் சேர்த்து மொத்தம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், அதனை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டும் நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜான்சி ஆஜரானார்.






      Dinamalar
      Follow us