/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
3 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை
/
3 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை
ADDED : மே 21, 2024 07:20 AM
சிவகாசி : சிவகாசி பகுதியில் பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர் ஆய்வு தனி திருப்பதி நடத்திய ஆய்வில், விதிமீறலில் ஈடுபட்ட 3 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தார்.
பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர் ஆய்வு தனி தாசில்தார் திருப்பதி தலைமையிலான அதிகாரிகள் சிவகாசி அருகே கீழத்திருத்தங்கலில் அண்ணாமலையின் ராமகிருஷ்ணா பட்டாசு ஆலையில் ஆய்வு செய்த போது, கூடுதல் பணியாளர்களைக் கொண்டு, மரத்தடியில் பட்டாசு உற்பத்தி செய்ததும், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததும் தெரியவந்தது.
சிவகாசி அருகே நாரணாபுரத்தில் ராஜாமணியின் பட்டாசு ஆலையில் ஆய்வு செய்தபோது, தகர செட் அமைத்து பட்டாசு உற்பத்தி செய்ததும், பாதுகாப்பு வேலி இல்லாதது, மரத்தடியில் பட்டாசு உற்பத்தி செய்தது, அருகே உள்ள பட்டாசு ஆலைக்கு இடையே குறிப்பிட்ட பாதுகாப்பு துாரம் இல்லாதது உள்ளிட்ட விதிமீறல்கள் இருப்பதை கண்டறியப்பட்டது.
அதேபோல் விருதுநகர் அருகே துலுக்கபட்டியில் அலங்கார் பட்டாசு ஆலையில் ஆய்வு செய்தபோது, முழுமையடையாத பட்டாசுகள், திரிகள் அதிகமாக இருப்பு வைக்கப்பட்டு இருந்ததும், அனுமதி இன்றி செட் அமைத்தும், மரத்தடியிலும் பட்டாசு உற்பத்தி செய்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து விதிமீறலில் ஈடுபட்ட 3 பட்டாசு ஆலைகளின் உரிமத்தையும் தற்காலிகமாக ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தார்.

