ADDED : மார் 26, 2024 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசி பகுதியில் உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ. 3 லட்சத்து 67 ஆயிரத்து 70 பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரையிலும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ. 16 லட்சத்து 6 ஆயிரத்து 340 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் தேர்தல் பறக்கும்படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இன்று ஒரு நாள் மட்டும்பல்வேறு நபர்களிடமிருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.3 லட்சத்து 66 ஆயிரத்து 70 பறிமுதல் செய்யப்பட்டது.
ஐந்து நாட்களில் இதுவரையிலும் அனுமதி இன்றி கொண்டுவரப்பட்ட ரூ. 16 லட்சத்து 6 ஆயிரத்து 340 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

