sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சதுரகிரியில் 50,000 பக்தர்கள் ஆடி அமாவாசை வழிபாடு

/

சதுரகிரியில் 50,000 பக்தர்கள் ஆடி அமாவாசை வழிபாடு

சதுரகிரியில் 50,000 பக்தர்கள் ஆடி அமாவாசை வழிபாடு

சதுரகிரியில் 50,000 பக்தர்கள் ஆடி அமாவாசை வழிபாடு


ADDED : ஆக 04, 2024 10:14 PM

Google News

ADDED : ஆக 04, 2024 10:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்:சதுரகிரி கோவிலில் நேற்று நள்ளிரவு முதல் பக்தர்கள் திரண்டதால் அதிகாலை 3:30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மதியம் 12:00 மணி வரை தாணிப்பாறை வழியாக 38,000 பேர், வாழைத்தோப்பு பாதை வழியாக 13,000த்திற்கும் மேற்பட்டவர்கள் மலையேறியதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதியம் 12:00 மணிக்கு தாணிப்பாறை வனத்துறை கேட் மூடப்பட்டதால் அதன் பிறகு வந்த பல ஆயிரம் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படவில்லை. இதனால் கேட் முன், சூடமேற்றி கோவிலை நோக்கி வணங்கி ஏமாற்றத்துடன் அந்த கூட்டம் திரும்பி சென்றது.

கோவிலில் சுந்தர மகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு 18 வகை அபிஷேகங்களுடன் அமாவாசை வழிபாடு நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் எந்த ஒரு கடையும் இல்லாததால் தண்ணீர் கிடைக்காமல் பக்தர்கள் தவித்தனர்.






      Dinamalar
      Follow us