sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

291 மையங்களில் 71,384 தேர்வர்கள் எழுதுகின்றனர்; 71,384 தேர்வர்கள் எழுதுகின்றனர்

/

291 மையங்களில் 71,384 தேர்வர்கள் எழுதுகின்றனர்; 71,384 தேர்வர்கள் எழுதுகின்றனர்

291 மையங்களில் 71,384 தேர்வர்கள் எழுதுகின்றனர்; 71,384 தேர்வர்கள் எழுதுகின்றனர்

291 மையங்களில் 71,384 தேர்வர்கள் எழுதுகின்றனர்; 71,384 தேர்வர்கள் எழுதுகின்றனர்


ADDED : ஜூன் 08, 2024 05:38 AM

Google News

ADDED : ஜூன் 08, 2024 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்த 71,384 பேர் எழுத 291 மையங்கள் தயார் நிலையில் உள்ளது.

இது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது. நாளை (ஜூன் 9) டி.என்.பி.எஸ்.சி., மூலம் காலியாக உள்ள குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு நடக்கிறது.

மாவட்டத்தில் 291 தேர்வு மையங்களில் 71,384 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதுகின்றனர். தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள 291 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துணை தாசில்தார் நிலையில் 53 நடமாடும் குழுக்கள், துணை கலெக்டர் நிலையில் 10 பறக்கும் படை அலுவலர்கள், 291 தேர்வு மையங்களுக்கும் வீடியோகிராபர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகரில் 48 மையங்களில் 10,752 பேர், அருப்புக்கோட்டை 41 மையங்களில் 10,002 பேர், காரியாபட்டி 14 மையங்களில் 3782, ராஜபாளையம் 52தேர்வு மையங்களில் 12,964, சாத்துார் 26 தேர்வு மையங்களில் 6113, சிவகாசி 45 மையங்களில் 12,046, ஸ்ரீவில்லிபுத்துார் 36 மையங்களில் 8526, திருச்சுழி 11 மையங்களில் 1790, வெம்பக்கோட்டை 7 மையத்தில் 1789, வத்திராயிருப்பு 11 மையங்களில் 3620 பேர் என 71,384 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

கலெக்டர் ஜெயசீலன் கூறியதாவது: தேர்வு மையங்களின் முன் தேர்வு எழுதுபவர்களின் பதிவு எண்கள், தேர்வு அறைகளின் எண்கள் ஆகிய விபரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகள் பெரிதாகவும், தெளிவாகவும் வைக்கப்பட வேண்டும். தேர்வு எழுதுபவர்கள் தேர்வு அறைக்கு சிரமமின்றி செல்வதற்கு ஏதுவாக வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட வேண்டும்.

தேர்வர்கள் காலை 9:00 மணிக்கு முன்னதாகவே தேர்வு அறைக்கு வந்துவிட வேண்டும். மையங்களில் எந்தவொரு மின்னனு சாதனங்களையும் அனுமதிக்கக்கூடாது. தேர்வுக்கூட கண்காணிப்பாளர்களும் அலைபேசியை தேர்வறைக்குள் பயன்படுத்தக்கூடாது, என்றார்.






      Dinamalar
      Follow us