sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விஜயகரிசல்குளத்தில் கண்டெடுக்கப்பட்ட சுடுமண் பெண் தலை பொம்மை

/

விஜயகரிசல்குளத்தில் கண்டெடுக்கப்பட்ட சுடுமண் பெண் தலை பொம்மை

விஜயகரிசல்குளத்தில் கண்டெடுக்கப்பட்ட சுடுமண் பெண் தலை பொம்மை

விஜயகரிசல்குளத்தில் கண்டெடுக்கப்பட்ட சுடுமண் பெண் தலை பொம்மை


ADDED : ஜூன் 25, 2024 12:18 AM

Google News

ADDED : ஜூன் 25, 2024 12:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளம் 3 ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணாலான பெண் தலை பொம்மை கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்த தகவலை அமைச்சர் தங்கம் தென்னரசு ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மூன்றாம் கட்ட அகழாய்வில் முதற்கட்டமாக 3 பள்ளங்கள் தோண்டப்பட்டன. இதுவரை உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, கண்ணாடி மணிகள், பழங்கால செங்கற்கள், வட்ட சில்லு உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தது. நேற்று அகழாய்வில் சுடு மண்ணால் ஆன பெண் தலை பொம்மை கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு, ''மூன்றாம் கட்ட அகழாய்வில் 30.7 மில்லி மீட்டர் உயரமும், 25.6 மில்லி மீட்டர் அகலமும் கொண்ட சுடுமண் பெண் தலை பொம்மை கிடைத்துள்ளது,'' என்றார்.

அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி, ''ஏற்கனவே நடந்த இரண்டு கட்ட அகழாய்வுகளில் சிறிய அளவிலான சுடுமண் உருவ பொம்மை கண்டறியப்பட்டது. தற்போது பெரிய உருவ பொம்மை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த உருவ பொம்மை குந்தம் என்ற சிகை அலங்காரத்தில் காணப்படுகிறது. முன்னோர்கள் கலைக்கு மட்டும் அல்லாமல் சிகைக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என இதிலிருந்து தெரிகிறது,'' என்றார்.






      Dinamalar
      Follow us