ADDED : செப் 01, 2024 11:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி : காரியாபட்டி தோணுகால் கிராமத்தைச் சேர்ந்த மோகன் மகன் சூர்யபிரகாஷ் 20, நேற்று முன் தினம் இரவு 11:00 மணிக்கு டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) கல்குறிச்சி சென்று வீடு திரும்பும் போது, தனியார் பள்ளி அருகே நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
மல்லாங்கிணர் போலீசார் விசாரிக்கின்றனர்.