/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மூன்றரை வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் சிறுவன் மீது போக்சோ
/
மூன்றரை வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் சிறுவன் மீது போக்சோ
மூன்றரை வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் சிறுவன் மீது போக்சோ
மூன்றரை வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் சிறுவன் மீது போக்சோ
ADDED : ஜூலை 13, 2024 09:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்:விருதுநகர் அருகே ஒரு கிராமத்தில் மூன்றரை வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சித்த 17 வயது சிறுவனை மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
விருதுநகர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் மூன்றரை வயது சிறுமி. இவர் ஜூலை 11 இரவு 8:00 மணிக்கு எதிர் வீட்டில் விளையாடி விட்டு திண்ணையில் அமர்ந்திருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், திண்ணையில் உட்கார்ந்திருந்த சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சித்தான். இதை பார்த்த சிறுமியின் தாய் சத்தம் போட்டதும் சிறுவன் தப்பிச் சென்றான். மகளிர் போலீசார் சிறுவனை போக்சோவில் கைது செய்தனர்.