sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வாகை சூட பகீரத முயற்சியில் அ.தி.மு.க

/

வாகை சூட பகீரத முயற்சியில் அ.தி.மு.க

வாகை சூட பகீரத முயற்சியில் அ.தி.மு.க

வாகை சூட பகீரத முயற்சியில் அ.தி.மு.க


ADDED : மார் 22, 2024 04:14 AM

Google News

ADDED : மார் 22, 2024 04:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: விருதுநகர் தொகுதி அ.தி.மு.க., கூட்டணி கட்சியான தே.மு.தி.க.,விற்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அ.தி.மு.க., வினர் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக இறங்க தயாராகி வருகின்றனர்.

கடந்த லோக்சபா தேர்தலில் விருதுநகர் தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., சார்பில் அழகர்சாமி போட்டியிட்டார். இடைத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தொடர வேண்டும் என்ற முனைப்பில் இருந்த அ.தி.மு.க.,வினர் லோக்சபா தேர்தலை கண்டு கொள்ளவில்லை. இதனால் காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார்.

தற்போதய தேர்தலில் விருதுநகர் தொகுதி மீண்டும் தே.மு.தி.க., விற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 2021ல் சட்டசபை தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவிவில்லிபுத்துார் தொகுதியை தவிர அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க., தோல்வியை கண்டது. இது மாவட்டம் பொறுப்பாளராகவும், ராஜபாளையத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பெரும் சரிவாக கருதப்பட்டது.

இதை சரிக்கட்ட தற்போதய லோக்சபா தேர்தலில் கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க., வெற்றி பெற செய்வதற்கு அ.தி.மு.க., வினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதையடுத்து கட்சி, நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அடுத்தடுத்து நடத்தப்பட்டு கட்சியினரை உற்சாகப்படுத்தி தேர்தல் பணியை தீவிரமாக செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்.






      Dinamalar
      Follow us