ADDED : மே 02, 2024 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டைஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா ஏப்ரல் 23ல், கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஒன்பதாம் நாள் விழாவாக நேற்று பக்தர்கள் விரதமிருந்து அக்னி சட்டி ஏந்தி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் அக்னிசட்டி ஏந்தி வந்தனர்.
இரவு பூக்குழி விழா நடந்தது.
ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.

